அருள் மிகு படைகாத்தவர் சுவாமி திருக்கோவில்: தமிழ்நாடு மாநிலம்,பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, அழகிய காடை மாநகர் என்னும் காடூர் கிராமத்தில், இத் திருக்கோவில் அமைந்துள்ளது . இத் திருத்தலத்தில் தேவியர்கள் பூரணம், புஷ்கலை சமேத அருள்மிகு படைகத்தவர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத் திருக்கோவில் அரியலூர் - திட்டக்குடி சாலையில் புதுவேட்டகுடியிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த படைகாத்தவர் ஆலயம் அழகிய ஆலமரத்தை தன் கரையில் கொண்டுள்ள முப்புறமும் நீரால் சூழப்பட்டுள்ள பெரிய ஏரியில் அமைந்துள்ளது.